இங்கிலாந்தின் தெற்கு லண்டன் வாண்ட்ஸ் வொர்த் மாவட்டத்தில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலையில் பணியாற்றிய லிண்டா டி சவுசா அப்ரு என்ற 31 வயது பெண் அதிகாரி கைதி ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

கைதியின் அறையில் கைதியுடன் பெண் அதிகாரி பாலியல் உறவில் இருக்க அதனை மற்றொரு கைதி செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் கைதியுடன்  பாலியல் உறவில்  இருந்த பெண் அதிகாரி தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.