சென்னை உயர்நீதிமன்றம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி போன்ற சுற்றுலா தளங்களுக்கு மே மாதம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என்பதால் வாகனங்களுக்கு இ_பாஸ் நடைமுறை கொண்டு வருமாறு உத்தரவிட்டது. அதன்படி கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்ட நிலையில் அதை வாகன ஓட்டிகள் ஆன்லைன் மூலம் எடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.

இந்த இ-பாஸ் நடைமுறை மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.