
மலேசியாவைச் சேர்ந்த ஜி.லோகன் -சுப்பம்மா தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்தனர். இந்த தம்பதியினர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் விடுதி அறையில் இருந்தனர். அப்போது லோகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சுப்பம்மா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் லோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.