
சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி கணேசபுரம், பலவந்தாங்கல், அரங்கநாதன், மவுண்ட், ரங்கராஜபுரம் மேட்லி, வில்லிவாக்கம், RBI, துரைசாமி, திருவொற்றியூர், மாணிக்கம் தாகூர், சூளைமேடு, வியாசர்பாடி, சேத்துப்பட்டு, கோயம்பேடு, புதுப்பாலம் உள்ளிட்ட 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் நபர்கள் மாற்று பாதையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.