
உலகில் புத்தாண்டு நாளை பிறக்க உள்ளது. உலக மக்களின் தொகை நாளை 8.09 பில்லியனாக இருக்கும் என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, 2024 ஆம் ஆண்டு, உலக மக்களின் தொகை 71 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதேபோன்று கடந்த 2023 ஆம் ஆண்டு 75 பில்லியனாக உயர்ந்திருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு மக்களின் தொகை 0.9% குறைவாக உள்ளது. வருகிற 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும், 2 பேர் உயிர் இழப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் புத்தாண்டு தினத்தில் மக்களின் தொகை 341 பில்லியனாக இருக்கும். ஜனவரி 2025 இல் இருந்து அமெரிக்காவில், ஒவ்வொரு 9 நொடிக்கும் ஒரு பிறப்பும், 9.4 வினாடிக்கு ஒரு இறப்பும் ஏற்படும். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்களின் தொகையில் ஒருவர் கூடுதலாக சேர்வார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.