அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் விடியா திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுவதாகவும், கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை தீர்க்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கிய மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல் திமுக அரசு முடக்கி வைத்ததாக குற்றம் சாட்டினார். இதனால் கொங்கு பகுதியில் சேர்க்கையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், மக்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி குடிநீர் வினியோகத்தை சீராக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் திமுக ஐடி விங் குழுவினர் தவறான செய்திகளை பரப்புவதாகவும் கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.