
தூத்துக்குடி மாவட்டம் கீழ அலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25). கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அஜித்குமாருக்கு அன்சியா(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அன்சியா கோவில்பிள்ளைவிளை தெருவில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனையடுத்து அன்சியா தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் அஜித்குமார் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அன்சியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்சியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.