செல்போன் எண்ணை மாற்றாமலே ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு புதிய விதிகள் நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. சிம்கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக சிம்கார்டை வேறு நெட்வொர்கிற்கு மாற்ற விரும்பினாலோ உடனடியாக மாற்ற முடியாது.

தற்போது பயன்படுத்தி வரும் செல்போன் எண்ணை ஒரு நிறுவனத்திடம் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு போர்ட் செய்ய UPC எண் ஒதுக்கப்படும். அதன்பின்னர் குறைந்தபட்சம் 10 நாட்கள் காத்திருந்த பிறகு தான் புதிய நெட்வொர்க்கிற்கு மாற்ற நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என TRAI உத்தரவிட்டுள்ளது.