நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது தொடர்ந்து சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சி செய்து வருகிறது. குறிப்பாக அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கிறதா தண்ணீர் போன்றவைகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நாசாவின் இன்சைட் லேண்டரால் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் திரவ நிலையில் தண்ணீர் தேக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது அங்கு ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் இருக்கும் நிலையில் திரவ நிலையில் நீர் தேக்கம் இருக்கிறது. அதாவது அந்த கிரகத்தின் மேற்பரப்புக்கு அடியில் அந்த திரவ நீர்த்தேக்கம் ஆனது ஆழமாக மறைந்துள்ளது. இது உலகளாவிய கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு இருக்கிறது. இது மேற்பரப்பிலிருந்து 11.5 முதல் 20 கிலோமீட்டர் கீழ் அமைந்துள்ளது. இந்த தண்ணீர் உடைந்த பாறைகளுக்கு இடையில் தேங்கி இருக்கிறது. இங்கு உறைந்த நிலையில் இருக்கும் நீர் மேற்பரப்பை போன்று இல்லாமல் திரவநீரை தக்க வைக்கும் அளவுக்கு வெப்பநிலையுடன் இருக்கிறது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.