இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நேற்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி திரில்லிங்கான வெற்றியைப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா அணி நூலிழையில் தோல்வியை சந்தித்தது .

இந்த தோல்வி தென்னாபிரிக்கா அணியின் வீரர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்தவகையில் டேவிட் மில்லர் மிகுந்த வருத்தத்துடன் வாட்டமான முகத்தோடும் காணப்பட்டார். அப்போது அவருடைய மனைவி மில்லர் அவரை கட்டி அணைத்து ஆறுதல் சொல்லிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.