ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்றை ஓவியமாக காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.  அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாதா வைஷ்ணவி கோயிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த விபத்தில் 10 பேர் பலியாகினார். மேலும் 41 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.