மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புஷீ என்ற அணை நீர்வீழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தின் சுற்றுலா வந்துள்ளார்கள். அவர்கள் ஒரு பெண் உட்பட நான்கு குழந்தைகள் நீர்வீழ்ச்சிக்கு மிக பக்கத்தில் சென்று விளையாடிக் கொண்டிருந்தனர் .அப்போது தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் அவர்கள் அச்சமடைந்து தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர் .அடுத்த சில நிமிடத்திலேயே அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றும் தற்போது ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரை தேடி வருகிறார்கள் இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.