நொய்டாவில் ஒரே பகுதியைச் சேர்ந்த 7 வீடுகளில் சில மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் மற்றும் பொருள் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பூட்டி இருந்த வீட்டிற்குள் திருடச் சென்றபோது அங்கிருந்த பொருட்களை வைத்து பக்கோடா போட்டு சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதோடு அவர்கள் பாத்ரூமில் சிகரெட் துண்டுகள் மற்றும் பீடா போன்றவற்றை விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இதுபற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பின் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுபோன்ற செயலை 7 வீட்டிலும் தொடர்ந்து செய்த திருடர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாகதான் இருக்க வேண்டும் என காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர். பின்பு வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.