ஜியோ மொபைல் கட்டணம் ஜூலை 3ம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய திட்டத்தில் ரீசார்ஜ் செய்து வரும் நிலையில் ஜியோவின் பிரபலமான பிளான்களான 395 ரூபாய், 1559 ரூபாய் ப்ரீபெய்டு திட்டங்களை நிறுவனம் நீக்கி உள்ளது.

ரூ.395 திட்டம் 84 நாட்கள் சேவையையும், ரூ.1,559 திட்டம் 365 நாட்களுக்கான சேவையையும் வழங்கி வந்தது. இந்த திட்டங்கள் பேசிக் மாடல் போன் வைத்திருப்பவர்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த திட்டத்தை தற்போது ஜியோ நீக்கி உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.