இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் தங்கள் வேலைகளை இருந்த இடத்திலிருந்து கொண்டே முடித்து விடுகின்றனர். குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. அதில் google pay மற்றும் phonepe உள்ளிட்ட செய்திகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் முன்னணி ஆன்லைன் பேமெண்ட் தளமாக இருக்கும் கூகுள் பே ஜூன் 4ம் தேதிக்கு பிறகு செயல்படாது என்று கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால் கூகுளின் இந்த முடிவை இந்திய பயனர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. காரணம் கூகுள் வாலட் பயன்பாட்டில் இல்லாத இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் கூகுள் பே செயலி வேலை செய்யும் என கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.