தமிழகத்தில் வருகின்ற ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மின்வாரியம் 1.60 லட்சம் கோடி கடனுடன் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் கடந்த 2022-23 இல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 6 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்வு இருக்கும் என்று தெரிகிறது. இந்த தகவல் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.