தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 35 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றது. இதில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு ஜூன் 28ஆம் தேதி உடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருதி தற்போது 8 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 1 முதல் ஜூலை 15ஆம் தேதி வரை இந்த தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால் 9499055689 என்ற whatsapp எண் மற்றும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.