
சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில், வாடிக்கையாளருக்கு என்ன தேவையோ. அதை இந்த இயந்திரத்தில் உள்ள தொடுதிரை மூலம் தேவையான மதுபான வகையை தேர்வு செய்ய வேண்டும்.
பின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தினால், தானாக மதுபானம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மது விற்பனைக்கு இயந்திரம் தேவையா என்று மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து டாஸ்மாக் விளக்கம் அளித்துள்ளது. அதில், மதுபானத்திற்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து இது வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக பணம் வசூலிக்க முடியாது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே மதுபானம் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.