
தமிழகத்தில் துணை கலெக்டர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வு கடந்த ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு மார்ச் மாதம் 18ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. மொத்தம் 90 பணியிடங்களுக்கு 2,38,247 பேர் போட்டி போடுகின்றனர்.
இந்நிலையில் குரூப்-1 மற்றும் ஒருங்கிணைந்த குரூப் 2 பி, சி முதல் நிலை தேர்வு களுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உதவி ஆட்சியர், அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான இந்த தேர்வை, 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இந்த நிலையில் உத்தேச விடைகளில் ஆட்சேபனை இருந்தால் ஜூலை 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.