ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் தங்களுடைய கனவு வீரர்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய வீரர்களுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது. அதன்படி கனவு அணியில் கேப்டனாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு அணியில் நிக்கோலஸ் பூரன், குர்பாஸ், சூரியகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டோயினஸ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரக்ஷித் கான், பும்ரா, அர்ஷ்தீப் சிங், பரூக்கி, நோர்ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த கனவு பட்டியலில் மொத்தம் 6 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.