T20 Wc பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம், T20 WCயில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டதைக் கைப்பற்றியுள்ளது. 177 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய தெ.ஆ., அணியை இந்திய அணி பவுலர்கள் 169/8 ரன்னில் கட்டுப்படுத்தினர். ஹர்திக் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

17 வருட நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு $2.45 மில்லியன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் இது ரூ.20.42 கோடி ஆகும். இரண்டாவது இடம் பிடித்த தென்னாப்பிரிக்க அணிக்கு ரூ.10.67 கோடி  வழங்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியை தழுவிய ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு தலாரூ.6.5 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.