![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/202103310237082054_death_SECVPF.jpg)
ஹைதராபாத் மாநிலம் அத்தாபூரை சேர்ந்தவர் அஜ்மீர் பேகம். 28 வயதான இவரை மாமியார் கொன்றுவிட்டு தப்பியோடிய நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10:15 மணியளவில் மாமியார் தன்னுடைய மருமகளிடம் டீ போட்டு கேட்டுள்ளார். ஆனால் தான் வேறு வேலை செய்து கொண்டிருப்பதால் தற்போது டீ போட முடியாது என்று மருமகள் கூறியுள்ளார்.
இதனால் சிறிது நேரம் காத்திருந்த மாமியார் தன்னுடைய மருமகளோடு சண்டையிட்டுள்ளார். பின்னர் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அப்பொழுது துப்பட்டாவால் மாமியார் அந்த பெண்ணின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.