தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் அதன் பின் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோயின், குணச்சித்திர வேடம் மற்றும் வில்லி கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவார். குறிப்பாக அவர் வில்லி கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட் ஆகிறது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் ராயன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு அவர்கள் முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரபலங்கள் என பலருக்கும் நேரில் சந்தித்து பத்திரிக்கை வழங்கி வருகிறார்கள். மேலும் அந்த வகையில் தற்போது டெல்லிக்கு சென்றுள்ள சரத்குமார், ராதிகா, வரலட்சுமி மற்றும் நிக்கோலய் ஆகியோர் பிரதமர் மோடிக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழ் வழங்கி உள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.