உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இரவு நேரத்தில் பப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து ஆடல் பாடல் என கொண்டாட்டத்தில்  ஈடுபடுவது வழக்கம். இதில் சில நேரங்களில் பிரச்சனைகளும் ஏற்படும் என்பதால் அதை சரி செய்வதற்கு ஆறடி உயரத்தில் இருக்கும் நபர்களை பவுன்சர்களாக வைப்பது வழக்கம். இந்த நிலையில் அந்த பப்புக்கு மூன்று இளம்பெண்கள் சேர்ந்து சென்றுள்ளார்கள். அங்கு விடிய விடிய மது அருந்திய அவர்கள் சில இளைஞர்களோடு சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளார்கள்.

ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறியதால் டிஜேவிடம் பாட்டை அடிக்கடி மாற்றுமாறு கூறியுள்ளனர். இவர்களுடைய அராஜகம் ஒரு கட்டத்தில் எல்லை மீறியதால் டிஜே அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அங்குள்ள மது பாட்டில்களை மூன்று பெண்களும் அடித்து நொறுக்கி உள்ளனர். இதனால் பொறுமை இழந்த பவுன்சர்கள் அந்தப் பெண்களை சாராம்ரியாக தாக்கி அடித்து துவைத்து வெளியே வீசியதில் அவர்களுடைய ஆடை கிழிந்து உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.