கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷா (24) என்பவர் சென்னை தி நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்யாமலே நெருங்கி பழகி வந்த நிலையில் வினிஷா கர்ப்பமாகியுள்ளார். அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கழிப்பறையில் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார்.

அப்போது பிரசவம் விபரீதமான நிலையில் குழந்தையின் கால்களை பிடித்து இழுத்துள்ளார். இதில் குழந்தையின் கால்கள் தனியாக பிய்ந்து வந்தது. இதனால் குழந்தை உயிரிழக்கவே கால்களை கழிப்பறையில் போட்டுவிட்டு குழந்தையின் சடலத்தை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வினிஷா சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக மாம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ‌ வந்தனர். இந்நிலையில் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.