விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் இன்று பிரேத பரிசோதனை முடிவடைந்து உறவினர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த தந்தை தன் மகளின் உடலை பார்த்து கதறி துடிக்கிறார். அந்த மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் முன்பாகவும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வெளியாட்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் நிலையில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.