
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் புதுக்கோட்டை மதுரை நீலகிரி கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் சிவகங்கை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.