தமிழகத்தில் நான்கு மாவட்ட கடற்கரைகளுக்கான  கள்ளக்கடல் நிகழ்வானது நாளை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடல் சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், கடலோரே மாவட்டங்களான கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய கடற்கரைகளில் சுமார் 2.2 மீட்டர் வரை அலை எழும்ப வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நாளை இரவு 11 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.