2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதனால் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் இனி பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது. அதனைப் போலவே அனைத்து அரசு பணிகளும் இன்று முதல் வழக்கம் போல மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.