தமிழகத்தில் அதிக அளவிலான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் மக்களின் வசதிக்காக அவ்வபோது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு செல்லும் 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் -செகந்திராபாத் வரை செல்லும் சிறப்பு ரயில் சேவை ஜூலை 17ஆம் தேதி வரை ஈரோடு – நாந்தேட் (மகாராஷ்டிரா) ரயில் சேவை செப்டம்பர் 29 வரை, மதுரை – கச்சிகுடா(தெலுங்கானா) ரயில் சேவை அக்டோபர் 2 வரை, நாகர்கோவில் – கச்சிகுடா ரயில் சேவை செப்டம்பர் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.