
தேனி மாவட்டத்தில் நேற்று தீபாவளியில் நடந்த ஒரு விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது நேற்று கம்பம்-கூடலூர் அப்பாச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. இரு வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில் ஒரு இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் கூடலூர் பகுதியை சேர்ந்த சஞ்சய், சேவாக் மற்றும் லிங்கேஷ் ஆகியோர்கள் ஆவார். இந்த விபத்தில் மற்றொரு பைக்கில் வந்த மோனிஷ் மற்றும் கேசவன் ஆகிய ஒரு பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.