
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பழனிச்சாமி- பர்வதம் தம்பதியினர் வசித்து வந்தனர். இன்று பழனிச்சாமியும் பர்வதமும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வயதான தம்பதியினரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும், பழனிச்சாமி குடும்பத்தினருக்கும் இடையே ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வேலி தாண்டுவது தொடர்பாக தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று குடிபோதையில் இருந்த ரமேஷ் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் பழனிச்சாமியையும் பர்வதத்தையும் அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.