தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து அரசு திட்டங்களும் மக்களை சென்றடைகின்றன. இதில் ரேஷன் கடை ஊழியர்களின் பங்கு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உலக உணவு தினத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விருது வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைத்தது. ஆனால் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினத்தில் விருதுகள் வழங்கப்படாமல் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த வருடம் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படும் என்று தற்போது ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரேஷன் கடைகளுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடப்பது மற்றும் சிறப்பாக பணியாற்றுவது போன்ற பிரிவுகளின் கீழ் சிறந்த ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.