
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழையை கண்காணிப்பதற்கு சென்னைக்கு மட்டும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல் பாண்டியன், மேக்னாத்ரெட்டி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பருவமழை பணிகளை மண்டல வாரியாக துரிதப்படுத்தி முடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது நேற்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய பேனர்களை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். இதேபோன்று பிறமாவட்டங்களிலும் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.