
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. என் நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூரில் மழை பெய்யும். எனவே பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் குடை மற்றும் ரெயின் கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும். மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று விடுமுறை குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.