தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று மற்றும்  நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதன்படி நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதேபோன்று நாளை தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.