
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களின் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜன் என்ற கண்ணுகுட்டி , அவரது மனைவி விஜயா மற்றும் அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மூன்று பேர் மீதும் மரணத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது மற்றும் ஆரோக்கியமற்ற போதை பொருட்களை விற்பனை செய்தது என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்களின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.