கரூர் மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வரும் மாணவியை இன்று பகல் 12:00 மணி அளவில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி மதியம் பேருந்தில் இருந்து இறங்கி தன் தோழிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை சில வாலிபர்கள் பின்தொடர்ந்து ஆம்னி வேனில் சென்ற நிலையில் திடீரென அந்த மாணவியை மட்டும் கடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது மாணவியின் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவரை ஒருதலையாக காதலித்து வந்ததுள்ளார். அந்த மாணவி காதலிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இன்று வாலிபர் கடத்தி சென்று விட்டார். மேலும் போலீசார் அவர்களை வலை வீசி தேடும் நிலையில் பட்ட பகலில் நடுரோட்டில் இந்த சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.