தமிழகம் முழுவதும் உள்ள இளம் மகளிர்க்கு மத்திய அரசின் உத்தரவின் படி கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் நடந்த பதில்களுக்கு பதிலுரை பேசிய அவர், மகளிர் இளம் பருவத்தினருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தமிழகத்திற்கு தடுப்பூசிகளை தருவதாக கூறியிருக்கிறார்கள். எனவே விரைவில் மாநிலம் முழுவதும் இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.