
ஆம்ஸ்ட்ராங் படுகொலையானது தமிழ்நாட்டை உலுக்கியது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் சென்னையில் 6 ஆயிரம் பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் ரவுடி பட்டியலில் உள்ள 21 ஆயிரம் பேர் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், போலீசார் ரவுடிகளின் வீடுகளுக்கு நேராக சென்று எச்சரித்து வருகின்றனர். மேலும், ரவுடிகளை ஏ.ஏ பிளஸ், பி, சி என 4 பிரிவுகளாக தரம் பிரித்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது