வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெயர் பலகையை தமிழ் மொழியில் வைக்காமல் இருக்கும் வணிக நிறுவனங்கள் மீது  அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதற்கு முன்பாக ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது, ஆனால் தற்போது ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்தார். அதன் பின் தொழிலாளர் நலத்துறை சார்பாக பெயர் பலகையை தமிழில் வைக்காதவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி கூறியதாவது, அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும். அவர்கள் வேற மொழிகளை பயன்படுத்துவதை நாங்கள் தடுக்கவில்லை, ஆனால் அந்தப் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் பெரிதாக இருக்க வேண்டும். அதோடு அவை  5:3:2 என்ற வகையில் இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் பெயர் பலகை இருக்கிறதா என்பதை உறுதி செய்ய அடிக்கடி ஆய்வு நடத்தப்படும் என்று கூறினார். அதையும் மீறி வேற மொழிகளில் பெயர் பலகை வைத்திருப்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கை இப்போது தீவிர படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.