
தமிழக அரசின், ‘டாஸ்மாக்’ நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக, மதுவகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் 7 நிறுவனங்களிடம் பீர், 11 நிறுவனங்களிடம் மது வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. சமீபத்தில் மது தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையை லிட்டருக்கு 3.47ஆக அரசு உயர்த்தியதால், மதுவகை தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது. மது பாட்டிலுக்கு கூடுதல் விலை வேண்டும் என மது தயாரிப்பு ஆலைகள் கோரிக்கை விடுத்த நிலையில், சாதாரண மதுவகை பாட்டிலுக்கு 2 வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.