தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஜனவரி 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதோடு அதிகாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் நிலவும். அதன் பிறகு இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த இரு தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.