இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். 91 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் இவர் திகழ்ந்துள்ளார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.