தமிழகத்தில் மாணவர்களுக்கு தரம் இல்லாத இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை தமிழக அரசு மறுத்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கழக அரசு பொறுப்பு ஏற்று கடந்த மூன்று ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியருக்கு தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.