திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருப்பூர் மாவட்டம் கல்லாங்காட்டில் இருக்கும் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சிவகுமாருக்கும் அதே நிறுவனத்தில் பணி புரியும் 35 வயதுடைய பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 16 வயதில் மகள் உள்ளார்.

இந்த நிலையில் சிவக்குமார் அந்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் திருப்பூர் தெற்கு அனைத்து மாநில காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.