
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜனசேவா கேந்திரா பொது சேவை மையத்திற்கு கடந்த 11-ஆம் தேதி மதியம் 4 மணிக்கு மூன்று மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ஏதோ விவரம் கேட்பது போல பேச ஆரம்பித்து திடீரென துப்பாக்கியை காட்டி மிரட்டி 3.5 லட்ச ரூபாய் பணத்தை பறித்தனர். முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த பொது சேவை மைய பணியாளர் பணத்தை பறித்ததும் மர்ம நபர்களை துரத்திக் கொண்டு ஓடினார்.
இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
उत्तराखंड की राजधानी देहरादून में 3 बदमाशों ने जनसेवा केंद्र में घुसकर साढ़े 3 लाख रुपए लूट लिए !!
Live फुटेज देखिए 👇 pic.twitter.com/DDzpRcJ0kT
— Sachin Gupta (@SachinGuptaUP) March 13, 2025