கன்னியாகுமரி மாவட்டம் கொத்தனார்விளையில் சத்தியநேசன் (64) என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் தென்னை மரம் ஏறும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யநேசனின் மனைவி லட்சுமிபாய், இளைய மகன் அமலன் (33) ஆகியோர் இறந்துவிட்டனர். இதனால் சத்யநேசன் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளில் இரவில் வீட்டில் தூங்கிய சத்தியநேசன் மறுநாள் காலையில் அருகில் உள்ள தென்னை மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தியநேசனின் மூத்த மகன் அகிலன் (44) என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினருக்கு இதுப்பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்தியநேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது கொலையா இல்லை தற்கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.