
பெங்களூரு மெட்ரோ போக்குவரத்து கழகத்தால் 144ஈ வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து 30 பயணிகளுடன் சிவாஜி நகர் நோக்கி இன்று காலை 9 மணி அளவில் மாநகரின் எம் ஜி சாலையில் அணில் கும்ப்ளே வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து தீப்பிடித்து எறிந்தது. பேருந்தின் இஞ்சினில் இருந்து பற்றத் தொடங்கிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரதவியது.
உடனே பேருந்தின் முன் பக்கத்திலிருந்து புகை வருவதை கண்ட நடத்துனர் பேருந்து விட்டு கீழே இறங்குமாறு பயணிகளை வலியுறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.