![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/f0094fad-2fdf-426c-85b8-94a4a092d309.jpg)
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் பி. சுசிலா. இவர் கடந்த 1953 ஆம் ஆண்டு வெளியான பெற்ற தாய் என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான நிலையில் 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியுள்ள நிலையில், 5 முறை தேசிய விருதும், 11 முறை மாநில விருதுகளையும் வென்றுள்ளார். இவருக்கு தற்போது 88 வயது ஆகிறது.
இந்நிலையில் பாடகி சுசீலா பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக முடிக்காணிக்கை செலுத்தியுள்ளார். இவர் நடக்க முடியாத நிலையில் 2 பேரின் துணையுடன் முடிகாணிக்கை செலுத்தி விட்டு சாமி தரிசனம் செய்தார். அதோடு நாராயண மந்திரம் பாடலை பாடி அனைவரையும் வியப்படைய வைத்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.